இன்று மதியம் மின்தடையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெனகா நேஷனல் பிஎச்டி (டிஎன்பி) தெரிவித்துள்ளது.
முகநூல் பதிவில், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பிற்பகல் 3.02 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக TNB தெரிவித்துள்ளது. ஜோகூர், யோங் பெங்கில் உள்ள யோங் பெங் நார்த் மெயின் இன்லெட் துணை மின்நிலையத்தில் (PMU) சேதமடைந்த உபகரணங்களால் தீபகற்பத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது என்று ஆய்வுகள் வழி கண்டறியப்பட்டுள்ளன.