திடீர் வெள்ளத்தால் 10 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

அலோர் ஸ்டார்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால்  ஜாலான் கோல கெடாவில் உள்ள தாமான் பெர்சத்துவில் 10 வீடுகள் நேற்று இரவு வெள்ளத்தில் மூழ்கின.

கோத்தா செத்தார் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (PA) நோர்லிசாவதி இஸ்மாயில் கூறுகையில், இரவு 10.05 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவரது உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை கண்காணித்ததாக அவர் கூறினார். இந்தப் பகுதியில் சரியான வடிகால் அமைப்பு இல்லாததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இருப்பினும், நீர்மட்டம் குறைந்து வருவதால், அங்கு தற்காலிக இடமாற்ற மையம் (பிபிஎஸ்) திறக்கப்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here