மலாக்கா, ஆகஸ்ட் 5 :
நேற்று நண்பகல் 2 மணியளவில், குருபோங் தொழில்துறை பகுதியில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் மலாக்கா அமலாக்கப் பிரிவு நடத்திய சோதனையில், 12,000 லிட்டர் டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சியை முறியடித்ததுடன், எரிபொருளையும் பறிமுதல் செய்தனர்.
இரண்டு வார கண்காணிப்புக்குப் பிறகு, காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் நோரேனா ஜாபர் கூறினார்.
இரண்டு டேங்கர் லாரிகள், எரிபொருளை மாற்றப் பயன்படுத்திய கருவிகள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், மொத்த பறிமுதல்களின் மதிப்பு RM186,000 என்றும் அவர் கூறினார்.
விசாரணையின் அடிப்படையில், இந்த கும்பல் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் RM300 முதல் RM500 வரை டேங்கர்களில் டீசலை நிரப்பிவிட்டு, அதன் பிறகு மீண்டும் ஸ்டோர் டேங்குகளில் எரிபொருளை எடுத்துச் சென்று சேமித்து வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர், தொழிற்சாலைகளை உள்ளடக்கிய வாடிக்கையாளர்களுக்கு, லிட்டருக்கு RM4.15 க்கு விற்கிறார்கள் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் 37 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வழக்கு 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 21 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.









