கடை உடைத்து திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூவர் கைது

அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 11 :

இங்குள்ள ஒரு கார் சேவை மையத்தை உடைத்து, அவ்வுரிமையாளருக்கு RM30,000 நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில், கார் சேவை மையம் உடைக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது கூற்றுப்படி, அந்த வளாகம் ஆகஸ்ட் 5, மாலை 6.30 மணிக்கு பூட்டப்பட்டது. இருப்பினும், மறுநாள் காலை 7.50 மணியளவில், கார் சேவை மையத்தின் ஊழியர்கள் வேலைக்கு சென்ற போது வளாகம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

“அதைத் தொடர்ந்து, நேற்று ஷா ஆலாமில் மேற்கொண்ட இரு தனித்தனி சோதனைகளில் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர், அதில் முதல் சந்தேக நபருக்கு எட்டு கடந்த குற்றப் பதிவுகள் உள்ளன, இரண்டாவது சந்தேக நபருக்கு ஒரு கடந்தகால குற்றவியல் பதிவு உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தக் கைதின் மூலம் அம்பாங் ஜெயா, சுபாங், சுங்கை பூலோ மற்றும் அலோர் காஜா, மலாக்கா ஆகிய மாவட்டங்களில் நடந்த நான்கு கடைத் திருட்டு வழக்குகளை காவல்துறை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 457 இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here