சீன விசா அனுமதிகளை கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவிற்குள் நுழைய அனுமதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 : செல்லுபடியாகும் சீன விசா அனுமதிகளை வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகம், இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், சீனாவில் நீண்ட காலம் தங்கியிருந்து கல்வி பெறும் மலேசிய மாணவர்களிடமிருந்து விசா விண்ணப்பங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறியது.

வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதற்கு சீன அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது பெரும் சீனா மற்றும் மலேசியாவின் பொறுப்பான துறைகள், மலேசிய மாணவர்களை கல்வியின் பொருட்டு மீண்டும் சீனாவிற்கு திரும்பிவது தொடர்பாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகச் செயல்பட்டு, சில முன்னேற்றங்களைச் செய்துள்ளன” என்று அந்தப் பதிவில் அது கூறியது.

மேலும் தூதரக இணையதளம் மற்றும் தொடர்புடைய தளங்களில் வெளியிடப்படும் சமீபத்திய அறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்த சம்பந்தப்பட்டவர்கள் பரிந்துரைக்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த ஊடக அறிக்கைகளின்படி, சுமார் 8,000 மலேசிய மாணவர்கள் கோவிட்-19 மூடல் காரணமாக தங்கள் படிப்பைத் தொடர சீனாவுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here