முன்னாள் கிளாந்தான் துணை மந்திரி பெசார் அப்துல் ஹலீம் காலமானார்

கோட்டா பாரு, ஆகஸ்ட் 22 :

முன்னாள் கிளந்தான் துணை மந்திரி பெசார், டத்தோ அப்துல் ஹலிம் அப்துல் ரஹ்மான் தந்து 82 ஆவது வயதில் காலமானார்.

இங்குள்ள ராஜா பிரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் (HRPZ II) இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3.40 மணியளவில், ​​ நுரையீரல் தொற்று காரணமாக இறந்துவிட்டதாக, அப்துல் ஹலீமின் மகள் அஹ்லாமி உறுதிப்படுத்தினார்.

“இறைவனின் கிருபையால், அவரது நல்லுடல் இன்று இரவு ஸாததுல் இக்வான் மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, இஷா தொழுகைக்குப் பிறகு பாங்கோல் முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் , ” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here