கோட்டா பாரு, ஆகஸ்ட் 22 :
முன்னாள் கிளந்தான் துணை மந்திரி பெசார், டத்தோ அப்துல் ஹலிம் அப்துல் ரஹ்மான் தந்து 82 ஆவது வயதில் காலமானார்.
இங்குள்ள ராஜா பிரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் (HRPZ II) இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3.40 மணியளவில், நுரையீரல் தொற்று காரணமாக இறந்துவிட்டதாக, அப்துல் ஹலீமின் மகள் அஹ்லாமி உறுதிப்படுத்தினார்.
“இறைவனின் கிருபையால், அவரது நல்லுடல் இன்று இரவு ஸாததுல் இக்வான் மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, இஷா தொழுகைக்குப் பிறகு பாங்கோல் முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் , ” என்று அவர் கூறினார்.








