150க்கும் மேற்பட்ட அம்னோ பிரிவுகள் GE15ஐ உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை

கோலாலம்பூரில் 15ஆவது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சுமார் 158 அம்னோ பிரிவுத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ஜமால் யூனோஸ் கூறினார்.

அடுத்த உச்ச மன்ற கூட்டத்தில் கட்சியின் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியால் இந்த கோரிக்கையை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தெரிவிக்கப்படும் என்று அம்னோ சுங்கை பெசார் தலைவரான அவர் கூறினார். இங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது ஒருமித்த முடிவு, பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அம்னோவுக்கு நாடு முழுவதும் 191 பிரிவுகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here