எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் பெடரல் நீதிமன்றம் தண்டனை மற்றும் அபாரதத்தை உறுதி செய்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மாலை 5.30 மணியளவில் நீதி மன்றத்திலிருந்து கருப்பு காரில் வெளியேறினார்.
தூறல் இருந்தபோதிலும், சுமார் 300 ஆதரவாளர்கள் நஜிப்பிடம் இருந்து விடைபெறுவதற்காக கட்டிடத்தின் பின்னால் உள்ள வெளியேறும் பாதையின் அருகே பொறுமையாக காத்திருந்தனர் – அவர் தண்டனையை அனுபவிக்க காஜாங் சிறைக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவர் நீதிமன்றத்தின் மறுபுறம் நுழைவு பாதை வழியாக அவர் வெளியேறினார்.
அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி செய்தல் மற்றும் SRC இன்டர்நேஷனல் நிதியின் மீது கிரிமினல் நம்பிக்கை மீறல் ஆகிய 7 குற்றச்சாட்டுகளில் நஜிப் உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேல்முறையீடு செய்தார். அவரது தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 2021 இல் உறுதி செய்தது.