இந்தோனேசிய பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பெண் கைது

இந்தோனேசிய பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைனல் முகமட்  கூறுகையில், பத்து கேவ்ஸில் உள்ள ஒரு வீட்டில் திருமணமான தம்பதியரான தனது முதலாளியால் உடல் ரீதியாக துன்புறுத்தல்  செய்யப்பட்டதாகக் கூறி பணிப்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து 35 வயதான பெண் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 2019 முதல் தம்பதியினருக்காக வேலை செய்வதாகக் கூறிய 46 வயதான பணிப்பெண், கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு தப்பிச் செல்லச் செய்த பின்னர் புகார் அளித்தார். அவர் மருத்துவ பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். சந்தேக நபர் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜைனல் முகமட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here