கங்கார், செப்டம்பர் 10 :
கோலக் கெடா படகுத்துறை மற்றும் கோலா பெர்லிஸ் படகுத்துறை ஆகியவற்றில் அடிக்கடி ஏற்படும் வண்டல் மண் படிவு பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக, லங்காவிக்கான பயணிகள் படகு இயக்கத்திற்காக புதிய படகுத்துறையினை உருவாக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகையில், இரண்டு படகுத்துறைகளிலும் வண்டல் மண் படிவு பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது, இதனால் ரிசார்ட் தீவுக்கு பயணிகள் படகுகள் இயக்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் RM50 மில்லியன் செலவாகிறது.
“கோலக் கெடா ஜெட்டி மற்றும் கோலா பெர்லிஸ் படகுத்துறையின் நிலை உண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோண்டப்பட வேண்டிய நிலையை நான் காண்கிறேன், அதாவது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நாம் அகழ்வு செய்ய வேண்டும், ஏனெனில் வண்டல் மண் படிவதால் படகுப் பாதைக்கு நீரின் ஆழம் போதுமானதாக இல்லை.
“எனவே, இரு மாநிலங்களுக்கும் (கெடா மற்றும் பெர்லிஸ்) பயனளிக்கும் இடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து அமைச்சகம் யோசித்து வருகிறது, இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இந்த சிக்கலை தீர்க்க முடியும், நாங்கள் விவாதித்து வருகிறோம், அது பற்றிய விவரங்களை நான் பின்னர் அறிவிப்பேன்.” அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.