உரிமம் இல்லாமல் RM876,375 வைப்பு செய்த தொகையை ஏற்றுக்கொண்டதாக இரண்டு பிள்ளைகளின் தாய் மீது குற்றச்சாட்டு

சிக், செப்டம்பர் 12 :

கடந்த ஏப்ரல் மாதம் முதல், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மொத்தம் RM876,375 பண வைப்பினை ஏற்றுக்கொண்டதாக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் இரண்டு பிள்ளைகளின் தாயான வர்த்தகர் மீது இன்று, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கம்போங் லண்டக் ஹிலீர், குபாங், பாலிங் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நோர்ஸ்யாஸ்வானி ஏ ரஹீம் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி நஜ்வா சே மாட் முன் வாசிக்கப்பட்ட போது, அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகளின்படி, நிதிச் சேவைகள் சட்டம் 2013 (சட்டம் 758) இன் பிரிவு 10 இன் படி செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 22 நபர்களிடமிருந்து தனித்தனியாக RM2,500 முதல் RM489,000 வரை வங்கியில் வைப்பில் இடப்பட்டதாக கூறப்படும் தொகையை பெற்றதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஏப்ரல் 10 மற்றும் ஆகஸ்ட் 2 க்கு இடையில் பாலிங்கைச் சுற்றியுள்ள ஒரு தனி இடத்தில் இக்குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, 2013 நிதிச் சேவைகள் சட்டம் பிரிவு 137 (1) இன் படி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM50 மில்லியன் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அனைத்து குற்றச்சாட்டுகளுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு RM214,000 மதிப்புள்ள ஜாமீன் வழங்குமாறு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரியது.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர் நிச்சயமற்ற வருமானத்துடன் பகுதி நேரமாக மட்டுமே வேலை செய்வதாலும், இன்னும் தாய்ப்பால் கொடுக்கும் இரண்டு மற்றும் எட்டு மாத வயதுடைய இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாலும் ஜாமீன் குறைக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல் முஹமட் சாலிஹன் கோரினார்.

21 குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் RM5,000 ஜாமீன் நிர்ணயித்தார், மேலும் ஒரு குற்றச்சாட்டில் RM10,000 ஜாமீன் வழங்கப்பட்டது, அத்தோடு மொத்தம் RM115,000 மதிப்புள்ள இரண்டு நபர்கள் உத்தரவாதங்களும் வழங்கப்பட்டது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவரது அனைத்துலக பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நவம்பர் 23 ஆம் தேதி வழக்கை மீண்டும் குறிப்பிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர், ஜாமீன் செலுத்தத் தவறியதால், போகோக் சேனா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், நடவடிக்கைகளுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வக்கீல் முஹமட் சாலிஹென், ஜாமீன் தொகைக்கு எதிராக சுங்கை பட்டாணி உயர்நீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here