ஈப்போ, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கிய KM257 இல் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரெய்லரின் ஓட்டுநர் அவர் சென்ற வாகனம் சறுக்கி கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
திங்கள்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை 5.40 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவர் புடி அப்துல் ரஹ்மான் 52, என அடையாளம் காணப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர். காலை 7.40 மணியளவில் பணி நிறைவடைந்தது.