பொந்தியான், செப்டம்பர் 22 :
இன்று அதிகாலை சுமார் 5 மணி நேரம் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்களது வீடுகள் மூழ்கியதால், 18 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக வெளியேற்ற மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கம்போங் சாவாவில் உள்ள தேசியப் பள்ளியில் இன்று காலை 8 மணிக்குத் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில், ஜாலான் குர்னியா மற்றும் கம்போங் மாஜூ ஜெயா ஆகிய இரண்டு பகுதிகளைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
“சிவில் பாதுகாப்புப் படை (APM),ரோயல் மலேசியன் போலீஸ் (PDRM), மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் மலேசிய தன்னார்வத் துறை (RELA) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 18 பேரும் PPSக்கு மாற்றப்பட்டனர்.,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.