கிள்ளானில் 2 தற்காலிக தங்குமிட முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன

கிள்ளானில் அதிக அலையினால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் இரண்டு தற்காலிக வெளியேற்ற மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன. கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, கம்போங் டெலேக் பாரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  கம்போங் டெலெக் சமய ஆரம்பப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் சுங்கை சிரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் கம்போங் சுங்கை சிரே சமூகக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் கிராம சமூக மேலாண்மை மையத்தின் (MPKK) பிரதிநிதியை அல்லது நேரடியாக தொடர்புடைய PPS க்கு தொடர்பு கொள்ளலாம் என்று இன்று  கிள்ளான் மாவட்ட அலுவலகத்தின் (PTD) அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, பிடிடி கிள்ளான் அமலாக்க அதிகாரிகள் கம்போங் சுங்கை சிரேயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிக தங்குமிட மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, சிலாங்கூர் மாநிலச் செயலர் அலுவலகம் கடல் அலைகளின் நிகழ்வைத் தொடர்ந்து செப்டம்பர் முழுவதும் நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்தது. இன்று காலை 6.42 மணி முதல் 7.49 மணி வரை கடல் மட்டம் 5.4 மீட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here