ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை வயிற்றில் கத்தியால் குத்துவேன் என மிரட்டிய கணவருக்கு 8 மாதங்கள் சிறை

மலாக்கா, அக்டோபர் 2 :

கடந்த மே மாதம் நடந்த ஒரு சம்பவத்தில், மனைவி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபமடைந்த ஒரு கணவர், அவரை கத்தியால் குத்துவதாக மிரட்டியதுடன், சியாபு போதைப்பொருளை எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு, இன்று இங்குள்ள மாவட்ட நீதிமன்றம் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஃபைட்ரோஸ் முஸ்தபா, 41, மாவட்ட நிதிமன்ற நீதிபதி இஸ்வான் முஹமட் நோ முன்நிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், சட்டப்பூர்வமாக திருமணமான ஒரு தம்பதியினரில் தனது 32 வயது மனைவி உறவு கொள்ளும் அவரது ஆசைக்கு இணங்காவிடில், குற்றம் சாட்டப்பட்டவர் மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்துவதாக கூறி அச்சத்தை ஏற்படுத்தினார்.

மே 9, 2022 அன்று மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள பாலாய் பாஞ்சாங்கில் உள்ள முகவரியுடைய அவர்களது வீட்டில், இரவு 9 மணியளவில் இந்தச் செயல் செய்யப்பட்டது.

வழக்கின் உண்மைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது விருப்பத்திற்கு இணங்க மறுத்தால், தனது மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட குற்றவாளி, தனது மனைவியையும் சியாபுவை உட்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 375A பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவரது சிறைத்தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த வக்கீலும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here