மரங்களை ஏற்றி சென்ற டிரெய்லர் கவிழ்ந்ததால் 4 கி.மீ. வரை வாகன நெரிசல்

ஈப்போ: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) கிலோமீட்டர் 265 இல், தெற்கே செல்லும் மெனோரா சுரங்கப்பாதைக்குப் பிறகு, மரங்கள் ஏற்றப்பட்ட டிரெய்லர் கவிழ்ந்தது. இதனால் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) ட்விட்டர் கணக்கின்படி, பாதையில் டிரெய்லர் விபத்து ஏற்பட்டதாக  தெரிவித்தது.

எல்லா பாதைகளும் இன்னும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஈப்போ உத்தாராவிற்குச் செல்லும் சுரங்கப்பாதையில் நுழைவதற்கு 4.2 கிமீ தூரம் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பயனர்கள் கோல கங்சார் வெளியேறும் வழி வழியாக மாற்று வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். தற்போது அந்த இடத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here