பெர்லிஸ் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது

கங்கார், அக்டோபர் 14 :

14வது பெர்லிஸ் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மான் அறிவித்தார்.

15வது பொதுத் தேர்தலுடன் (GE15) இணைத்து ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தலையும் நடத்துவதற்காக, மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பில், பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சையத் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்லைலின் ஒப்புதலைப் பெற்றதாக அஸ்லான் கூறினார்.

பெர்லிஸ் சுல்தான் இன்று பெர்லிஸ் மாநில சட்டசபை கலைப்பு அறிவிப்பில் கையெழுத்திட்டதாக, இன்று தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

“எனவே, GE15 உடன் சேர்ந்து ஒரே நேரத்தில் மாநில தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் தேர்தல் ஆணையத்திடம் (EC) ஒப்படைப்போம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here