கெடாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தவர்களது எண்ணிக்கை 67 ஆக உயர்வு

அலோர் ஸ்டார், அக்டோபர் 17 :

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, கெடாவின் குபாங் பாசு மற்றும் லங்காவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேராக அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் அனைவரும் தற்போது செயலிலுள்ள இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் கெடாவிற்கான மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை, பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் (PA) முகமட் முவாஸ் முகமட் யூசோப் தெரிவித்தார்.

“இதற்கிடையில், லங்காவியில், நேற்று இரவு 8 மணிக்கு திறக்கப்பட்ட டேவான் சிஃபாக் நிவாரண மையத்தில் , இன்று காலை நிலவரப்படி 10 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேருடன் ஒப்பிடும்போது, ​​தற்போது அங்கு தஞ்சமடைந்தோர் எண்ணிக்கை 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேராக அதிகரித்துள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here