ஈப்போ, அக்டோபர் 21 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடற்ற ஒரு மூத்த குடிமகன் இறந்தது தொடர்பில், அவரை கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட சின் லிங் சின், 51, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் வாசித்த பிறகு, அவர் புரிந்ததாக தலை அசைத்தார். கொலைக் குற்றம் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் மனு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி அதிகாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரையுள்ள காலப்பகுதியில், குற்றஞ்சாட்டப்பட்டவர் இங்குள்ள ஜாலான் லியோங் சின் நாம், எண் 36, மிங் கோர்ட் உணவகத்திற்கு அருகிலுள்ள ஒரு பாதையில் லியோங் சோவ் வா (67) என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
துணை அரசு வக்கீல் பாத்திமா ஹன்னா அப்துல் வஹாப் வழக்கு தொடர்ந்தார், குற்றஞ்சாட்டப்பட்ட சின் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இவ்வழக்கின் மறு தேதியாக நீதிமன்றம் டிசம்பர் 16 ஆம் தேதியை நிர்ணயித்தது.