தேசா பெட்டாலிங் சொகுசுமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு கார்கள் சேதம்

கோலாலம்பூர், அக்டோபர் 24 :

நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்.23) இரவு தேசா பெட்டாலிங் சொகுசுமாடிக் குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கார்கள் சேதமடைந்துள்ளதாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

சொகுசுமாடிக் குடியிருப்பின் மற்றய பகுதிகளுக்கு தீ பரவுவதற்கு முன்பு, தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக தீயை அணைத்ததாக இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அது தெரிவித்தது.

“இரவு 10.35 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்களின் மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here