பாடாங் தேராப்பில் இயங்கி வந்த இரு வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன

அலோர் ஸ்டார், அக்டோபர் 27 :

பாடாங் தேராப், குப்பங் பாசு ஆகிய மாவட்டத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்படடவர்களை தங்க வைப்பதற்காக திறக்கப்பட்ட இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள், இன்று நண்பகல் 1 மணிக்கு முழுமையாக மூடப்பட்டதை அடுத்து, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மலேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, கேடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் செயற்பாட்டுப் பிரிவுத் தலைவர், மேஜர் முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறுகையில், குபாங் பாசு மாவட்டத்தில் தற்போது ஒரு வெள்ள நிவாரண மையம் மட்டுமே இயங்குகிறது என்றார்.

“இருப்பினும், குபாங் பாசுவில் உள்ள SK பிஞ்சாய் வெள்ள நிவாரண மையம் இன்னும் முக்கிம் பிஞ்சையில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 27 குடும்பங்களைச் சேர்ந்த 87 பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

“இதுவரை, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக APM உறுப்பினர்கள் இன்னும் அப்பகுதிகளில் கண்காணிபை மேற்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here