மலாக்கா, அக்டோபர் 27 :
சூடான சமையல் பாத்திரத்தால் பாட்டியை அறைந்து, சுடுவைத்த குற்றத்திற்காக 34 வயது பேரனுக்கு மாவட்ட நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (அக் 27), குற்றஞ்சாட்டப்பட்ட நஸ்ரி சோல் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி இஸ்வான் முகமட் நோ இத்தண்டனையை விதித்தார்.
அக்டோபர் 21 ஆம் தேதி காலை 9.20 மணியளவில், தாமான் சுதேரா பெலியா, பத்து பெரெண்டாம் என்ற இடத்தில் உள்ள வீட்டில் 83 வயதான ஹலிமா ஹாசன் என்ற அவரது பாட்டிக்கு தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நஸ்ரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM2,000 வரை அபராதம் விதிக்கக்கூடிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326A உடன் படிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நசீருக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராகவில்லை.