கோலக் கெடாவில் உயர் கடல் அலை நிகழ்வு; 37 வீடுகள் மற்றும் 19 கடைகள் வெள்ளத்தில் மூழ்கின

அலோர் ஸ்டார், அக்டோபர் 28 :

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அதிகாலையில் ஏற்பட்ட உயர் கடல் அலையை தொடர்ந்து, கோலக் கெடா, தாமான் ஸ்ரீ புத்ராவைச் சுற்றியுள்ள 37 வீடுகள் மற்றும் 19 கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.

கோத்தா ஸ்டார் மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, கேப்டன் நோர்லிசாவதி இஸ்மாயில் கூறுகையில், கடல் மட்டம் மூன்று மீட்டர் வரை உயர்ந்ததால், ஜாலான் தோக் பாசாய், கோலக் கெடாவில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

அவரது கூற்றுப்படி, கோத்தா ஸ்டார் மாவட்ட மலேசிய குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்கள் கோலக் கெடாவைச் சுற்றியுள்ள வெள்ளப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எமது உறுப்பினர்கள் இன்று அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கண்காணிப்பை மேற்கொண்டனர், பின்னர் கடல் நீர் படிப்படியாக உள்வாங்கியது. இந்த உயர் கடல் அலை நிகழ்வின்போது மழையோ பலத்த காற்றோ இல்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here