குனாக், நவம்பர் 1 :
இங்குள்ள துன் ஃபுவாட் விமான நிலைய கிராமமான குனாக்கில், இன்று அதிகாலை முதல் அவர்களது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், 13 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 66 குடியிருப்பாளர்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சமடைந்தனர்.
சபா பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் இங்குள்ள டேவான் கம்போங் துன் ஃபுவாட் விமான நிலையத்தில் இயங்கிவரும் நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அது குறிப்பிட்டிருந்தது.
மேலும் வெள்ளத்தால் தஞ்சமடைந்தவர்களில் 20 ஆண்கள், 27 பெண்கள், 8 சிறுமிகள் மற்றும் 11 சிறுவர்கள் உள்ளனர்” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.