கோலாலம்பூர்: போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் வெளிப்படையாக விற்கப்படுவதை மத்திய காவல்துறை இன்று இரவு உறுதி செய்தது. புக்கிட் அமான் செயலர் Noorsiah Mohd Saaduddin காவல்துறை ஏற்கனவே கண்காணித்து வந்ததாகக் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி வேப் திரவங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்ததும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
3.47 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சொத்துக்களை போலீசார் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரையும் கைது செய்தனர்.
போதைப்பொருள் விநியோகம் மற்றும் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். மேலும் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று முன்னதாக, போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் ஆன்லைனில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.