ஈப்போ, நவம்பர் 4 :
இங்குள்ள தாமான் இன்டா ஜெயாவில் உள்ள பிரபலமான கெக் லுக் தோங் குகைக் கோயில் பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை (நவம்பர் 7 முதல் 9 வரை) கோயில் வளாகம் பொதுமக்களுக்கு மூடப்படும் என்று கெக் லுக் சீ தொண்டர் நிறுவனத்தின் செயலாளர் கேபி சிங் தெரிவித்தார்.
“பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் வியாழக்கிழமை (நவம்பர் 10) மீண்டும் குகைக் கோயில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.