மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் மேலாளர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மலாக்கா, நவம்பர் 9 :

மலாக்கா டத்தோக்கள் சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்கும் முயற்சியில், போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டின்பேரில் 56 வயதான கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைதுசெய்து, ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

இந்த விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் நவ.12 வரை நடைமுறையில் இருக்கும் என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி மசானா சினின் நேற்று உத்தரவிட்டார்.

சந்தேக நபர் ஒரு டத்தோ தரத்திலான ஒரு சுற்றுலா நிறுவனத்தின் மேலாளருடன் இணைந்து, பொய்யான தகவல்களை அளித்து ஆவணத்தை சமர்பிப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை இங்குள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here