இராணுவ வீரர்கள் பயணம் செய்த லோரி விபத்துக்குள்ளாகி பக்கவாட்டு சாலையில் கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 18 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கேஜி துரியன் டான் அருகே இந்த சம்பவம் நடந்தபோது, ராணுவ வாகனத்தில் 24 வீரர்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறை மற்றும் மருத்துவ பணியாளர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர், பின்னர் 18 பேர் மேல் சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிவப்பு மண்டலத்தில் இருவரும் , மஞ்சள் மண்டலத்தில் ஏழு பேரும் மற்றும் பச்சை மண்டலத்தில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. காயமடைந்த வீரர்கள் துறையின் வாகனங்கள் மற்றும் மூன்று ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிறிய அளவிலான சிகிச்சை அளிக்கப்பட்டது.