RM1,500 மோசடி செய்ததாக இளம்பெண் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், நவம்பர் 17 :

கடந்த ஆண்டு RM1,500 பணத்தை வைப்பிலிடுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் வேலையில்லாத ஒரு இளம்பெண் மீது இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் முகமட் இப்ராஹிம் முஹம்மட் குலாம் முன்னிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட எம்.நந்தினி, 24, தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்ட எம்.நந்தினி 25 வயது பெண்ணை ஏமாற்றி, அவரது கணக்கில் RM1,500 பணத்தைப் போட்டதாக நம்பச் செய்ததாகக் கூறப்படுகிறது.

24 டிசம்பர் 2021 அன்று பிற்பகல் 2.34 மணிக்கு, நீலாயில் உள்ள பெக்கான் நீலாயில் உள்ள வங்கியில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளார். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தினிக்கு நீதிமன்றம் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM3,000 ஜாமீன் வழங்கியது அத்தோடு வழக்கு டிசம்பர் 13 அன்று மீண்டும் குறிப்பிடுவதற்கு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here