தூத்துக்குடியில் திடீரென கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்த நிலையில், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதி திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்தது.
இதனை தொடர்ந்து ஆமை ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.