தஞ்சோங் காராங்கில் சென்று கொண்டிருந்தபோது முதலில் ஒரு அழுக்கான துணி இருந்ததை நான் கவனித்தேன். அது எனக்கு தூக்கி எறியப்பட்ட துணியை நினைவூட்டியது. நான் அருகில் சென்றபோது, ஒரு சடலம் விறைப்பாக கிடப்பதை பார்ததாக டோரிமன் மார்சைட் கூறினார்.
66 வயதான டோரிமன், இன்று கம்போங் சுங்கை காஜாங்கில் உள்ள லோரோங் செம்பாகாவில் உள்ள புதரில் ஒரு மனிதனின் உடலைக் கண்டெடுத்த முதல் நபர் ஆவார். அதற்கு முன் சைக்கிளில் உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்தாக அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, கம்போங் சுங்கை காஜாங்கைச் சுற்றி நிறைய நிலத்தை விற்க விரும்பும் ஒரு நபரின் தொலைபேசி எண்ணை நண்பர் ஒருவர் கேட்டது எனக்கு நினைவிற்கு வந்தது. எனவே, நான் ஒரு பேனரைத் தேடினேன். ஆனால் எதுவும் இல்லை.
பின்னர், நான் தேநீர் அருந்தச் சென்றேன். நான் திரும்பி (அதே இடத்திற்கு) திரும்பியபோது, பேனர் எங்குள்ளது என்பதனை நான் அறிய விரும்பியதால் மீண்டும் பார்த்தேன் என்று அவர் இன்று சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது கூறினார்.
உடலைக் கண்டுபிடித்தது தொடர்பாக உடனடியாக MERS 999 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைத்ததாக டோரிமன் கூறினார். இதற்கிடையில், கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ராம்லி காசாவைத் தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
எனினும், இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை அவரது தரப்பினர் இன்னும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார். இந்த வழக்கை முதலில் குற்றமா அல்லது விபத்தா என விசாரிப்போம். சவப்பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே நடந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றார்.