பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், காவல்துறைக்கு புதிய சம்பள விகிதத்தை ஒப்புக்கொண்டதாக கூறியதை பிகேஆர் மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற தரப்பினரால் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.