மலேசிய, இஸ்ரேலிய கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்ட வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

மலேசியா மற்றும் இஸ்ரேல் நாட்டுக் கொடிகள் அருகருகே பறந்தபடி நெகாராகூ பாடும் வீடியோவை போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்றிரவு ஒரு அறிக்கையில் பெட்டாலிங் ஜெயா போலீசார், செப்டம்பரில் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், பயண நிறுவனம் ஏற்பாடு செய்த சுற்றுலாவில் இருந்தவர்கள் மலேசியர்கள் என்று நம்பப்படுவதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக தேசிய கீதம் சட்டம் 1968 பிரிவு 8 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1988 பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பில் ஊகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு போலீசார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here