புக்கிட் மெர்தாஜாம்: பினாங்கு மற்றும் கெடாவில் 87 வழக்குகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவர் சமீபத்தில் இரண்டு சோதனைகளில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
செபராங் பெராய் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டான் செங் சான் கூறுகையில், அவர்கள் மோட்டார் சைக்கிள்களை அண்டை நாட்டிற்குக் கடத்திச் சென்று அங்கு விற்பனை செய்வார்கள். ஜூன் மாதம் முதல் புக்கிட் மெர்தாஜாம் மற்றும் புக்கிட் தெங்கா கேடிஎம் ஸ்டேஷன் கார் நிறுத்துமிடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பான 10 புகார்களைப் பெற்ற பின்னர் ஆகஸ்ட் மாதம் சிறப்பு Op Lejang Waze குழுவை போலீசார் அமைத்தனர்.
நவம்பர் 23 அன்று மாலை 6.25 மணியளவில் பெர்லிஸின் படாங் பெசாரில் உள்ள ஹோம்ஸ்டேயில் 46 வயதுடைய முதல் சந்தேக நபரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் அவர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அண்டை நாட்டிற்கு கடத்த முயன்றதாக நம்பப்படுகிறது.
அவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, நவம்பர் 26 அன்று பட்டர்வொர்த் பேருந்து நிலையத்தில் அவரது 41 வயது கூட்டாளியை போலீசார் தடுத்து வைத்தனர். சந்தேக நபர் ஒரு மோட்டார் சைக்கிளை திருட முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெர்லிஸைச் சேர்ந்த இருவரும் பினாங்கிற்குச் சென்று KTM நிலையங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் Honda Waze Alpha மோட்டார் சைக்கிள்களை மட்டும் திருடுவார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாடாங் பெசாரில் உள்ள ஹோம்ஸ்டேக்கு எடுத்துச் செல்வதற்கு முன், அவற்றை திருடுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட “ஆலன் கீ”யைப் பயன்படுத்தியதாக டான் கூறினார். குற்றவியல் பதிவுகள் கொண்ட இரு சந்தேக நபர்களும், குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக டிசம்பர் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.