இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) படி, மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று சனிக்கிழமையன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உடனடியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் BMKG பொதுமக்களை எச்சரித்தது.

இந்த நிலநடுக்கம் மேற்கு இந்தோனேசிய நேரப்படி மாலை 4.49 மணிக்கு ஏற்பட்டது. கருட்டில் இருந்து தென்மேற்கே 52 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் 118 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 154 கி.மீ தொலைவில் உள்ள தலைநகரில் இந்த அதிர்வு உணரப்பட்டது. அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது உயரமான கட்டிடங்கள் சில நொடிகள் அசைந்தன.

மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மலேசியாவில் நிலநடுக்கம் எதுவும் உணரப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here