நாடாளுமன்றத்தில் நிரப்பப்படாமல் உள்ள இரண்டு துணை சபாநாயகர் பதவிக்கு பெரிக்காத்தான் நேஷனலின் Mas Ermieyati Samsudin உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இஸ்மாயில் சப்ரியின் நிர்வாகத்தில் சட்டத்துறை துணையமைச்சராக சேவையாற்றியுள்ள Mas Ermieyati தற்போது மூன்றாவது முறையாக மலாக்கா மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். DAP யின் நாடாளுமன்ற உறுப்பினர் Alice Lau மற்றும் கேமரன் மலை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் Ramli Mohd Nor ஆகியோரும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.