நிபோங் திபால், டிசம்பர் 10:
அடுத்தாண்டு பினாங்கு மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கம், மாநிலத்தின் ஆறிலிருந்து ஏழு சட்டமன்ற தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம் என்று மாநில PH தலைவர் சவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
சமீபத்திய 15வது பொதுத் தேர்தல் (GE15) முடிவுகளின் அடிப்படையில், PH அந்த இடங்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று கூறுகிறது என்றார்.
எனவே தமது தொகுதியை தக்க வைக்க, ஜனவரி முதல் மீண்டும் மாநில தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கை கூட்டணி கடுமையாக உழைக்கும் என்று பினாங்கு முதல்வருமான அவர் கூறினார்.