கோத்தா பாரு, டிசம்பர் 11 :
அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கோத்தா பாரு மற்றும் தும்பாட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு பாஸ் தலைவர்களிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததை டான்ஸ்ரீ அன்னுார் மூசா உறுதிப்படுத்தினார்.
தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வெறும் மூன்று நாட்களே ஆகியிருந்த நிலையில், தான் அந்த அழைப்பை நிராகரித்ததாக முன்னாள் கெத்தேரே பிரிவு அம்னோ தலைவருமான அவர் கூறினார்.
நேற்று கெத்தேரே நாடாளுமன்ற அம்னோ கிளைத் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார்.