கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 12 வயது சிறுமியை காணவில்லை; பெற்றோர் பாதுகாப்பாக உள்ளனர்

ஜாலான் சுங்கை கோரோக் என்ற இடத்தில், ஒரு குடும்பத்தினர் பயணித்த கார் திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில், 12 வயது சிறுமியைக் காணவில்லை, அதே நேரத்தில் அவரது பெற்றோர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று கெடாவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர், சயானி சைடன் தெரிவித்தார்.

இன்று நண்பகல் 2.39 மணிக்கு சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

“காரில் பயணமான மூவரில் பெற்றோர்கள் இருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். அதே நேரத்தில் 12 வயது சிறுமி காருடன் ஆற்றுக்குள் மூழ்கியதாக நம்பப்படுகிறது, அவரை தேடும் பணி மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here