தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்

புத்ராஜெயாவின் 11வது பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

நேற்றுக் காலை 10.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், இறந்துகிடந்த 43 வயது ஆடவர், அவரது வீட்டின் தரைத் தளத்தின் படிக்கட்டுகளில் கழுத்தில் துணியால் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், என்று புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் A அஸ்மாண்டி அப்துல் அஜிஸ் கூறினார்.

காலை 10.22 மணியளவில், இறந்தவரின் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது.

அதனைத்தொடர்ந்து, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 10.58 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் இல்லத்திற்குள் நுழைந்தது. பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார் என்று அவர் கூறினார்.

“விசாரணையின் விளைவாக, பாதிக்கப்பட்டவரை கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் நல்ல நிலையில் பார்த்ததாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார்,” என்று அவர் கூறினார்.

தடயவியல் குழுவின் விசாரணையின் படி, இச்சம்பவத்தில் வேறு எந்த குற்றவியல் கூறுகளோ அல்லது காயத்தின் தடயங்களோ இல்லை என்று கண்டறியப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற பிறகு தனியாக வாழ்கிறார் என்றும் அவரது மூன்று பிள்ளைகள் முன்னாள் மனைவியுடன் வசித்துவருவதாகவும்” அவர் கூறினார்.

புத்ராஜெயா மருத்துவமனை மனநல கிளினிக்கின் மருத்துவ அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அஸ்மாடி கூறினார்.

இறந்தவரின் உடல் புத்ராஜெயா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அஸ்மாடி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here