பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஐந்து அரசியல் கூட்டணிகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம், பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, கபுங்கன் பார்ட்டி சரவாக் தலைவர் அபாங் ஜொஹாரி ஓபன், கபுங்கன் ரக்யாட் சபா தலைவர் ஹாஜிஜி நூர் மற்றும் வாரிசான் தலைவர் ஷஃபி அப்டால் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர். அந்தந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் கையெழுத்திட்டனர்.