நாட்டின் 8 மாநிலங்ககளில் டிசம்பர் 20 வரை தொடர் மழைக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

திரெங்கானு, கிளாந்தான், பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய 8 மாநிலங்களில் டிசம்பர் 20-ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரெங்கானுவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் கிளாந்தான் மற்றும் பகாங்கில் தனாஹ் திங்கி, கேமரூன், லிப்பிஸ் மற்றும் ஜெரான்டுட் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அது தெரிவித்துள்ளது,

மேலும் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (கெரியன், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக் மற்றும் கோலா கங்சார்), பகாங் (மாரான், குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின்) மற்றும் ஜோகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) ஆகிய இடங்களிலும் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here