பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்று காலை ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 7 பேரை மீட்புத் துறையினர் தேடி வருகின்றனர்.