ஜோகூர் மற்றும் பகாங்கின் பல இடங்களில் நாளை வெள்ளம் ஏற்படலாம் – தேசிய வெள்ளக் கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையம்

ஜோகூர் மற்றும் பகாங்கின் பல பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (டிசம்பர் 22) வெள்ளம் ஏற்படும் என்று நீர்ப்பாசனத் துறையின் கீழான தேசிய வெள்ளக் கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஜோகூர், மெர்சிங் வட்டாரத்தைச் சுற்றி இருக்கும் சுங்கை மெலிகாய் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளைக் காலை 7 மணி முதல் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கம்போங் ஜெமாரி, பெங்காலான் பத்து மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில். காலை 8 மணி முதல் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் அக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங்கில், ரொம்பின் மாவட்டத்தில், செதாஜாம் பம்ப் ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள சுங்கை அனாக் எண்டாவ்வில் காலை 11 மணி முதல் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here