10 வயது சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில், ஐந்து பிள்ளைகளின் தந்தை மீது அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
56 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் டிசம்பர் 10 ஆம் தேதி, இரவு 8.40 மணியளவில் பெண்டாங்கில் உள்ள முக்கிம் குவார் கேபயாங்கில் உள்ள கம்போங் பஹாகியாவில் உள்ள ஒரு வீட்டில், சிறுமியின் பாலியல் உறுப்புக்களை தொட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் ஒரு தனி நபர் ஜாமீனுடன் RM13,000 ஜாமீன் வழங்கினார், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளையம் நீதிபதி விதித்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.