PN தேர்தலுக்கு சூதாட்ட நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியதாக கூறுவதா? ஹம்சா கண்டனம்

எதிர்க்கட்சிக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சூதாட்ட நிறுவனங்களால் நிதியுதவி அளிக்கப்பட்டது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் மறைமுகமாக பேசியதற்காக பெரிகாத்தான் தேசிய பொது செயலாளர்  ஹம்சா ஜைனுதீன் கடுமையாக சாடினார்.

இதை “போலி செய்தி” என்று விவரித்த ஹம்சா, அன்வார் PN பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கக் கூடாது என்றார். முறைகேடு நடந்திருந்தால் அன்வார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிதியமைச்சர் என்ற முறையில் அன்வார் முந்தைய அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்றார்.

நீங்கள் இப்போது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அல்ல. நான் எதிர்க்கட்சித் தலைவர். மேலும் அற்பமான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம். உங்களிடமிருந்து இனி போலியான செய்திகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள்  என்று அவர் நேற்று இரவு ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

முஹிடின் யாசின் நிர்வாகம் RM600 பில்லியன் செலவழித்ததாகக் கூறப்படும் அரசாங்க நடைமுறைகளில் கடுமையான மீறல்கள் இருப்பதை நிதி அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக இந்த மாத தொடக்கத்தில் அன்வார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், PN தேர்தல் பிரச்சாரம் சூதாட்ட நிறுவனங்களால், குறிப்பாக 4D ஸ்பெஷல் டிராவில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் ஓரளவுக்கு நிதியளிக்கப்பட்டது என்று கற்பனை செய்துள்ளார் என்று ஹம்சா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here