வெள்ளச் சேதம் தொடர்பில் கிளாந்தான் காவல்துறையில் குவிந்த சுமார் 10,500 புகார்கள்..!

தும்பாட்:

நாட்டின் பருவகால மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில், கிளாந்தான் காவல்துறை மொத்தம் 10,490 புகார்களை பெற்றுள்ளது என்று, கிளாந்தான் மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பாசீர் பூத்தே மாவட்டம் மிக அதிகமாக மொத்தம் 2,879 புகார்களையும், அதைத் தொடர்ந்து பச்சோக்கில் 2,132 புகார்கள் மற்றும் பாசீர் மாஸ் 1,812 புகார்களையும் பதிவுசெய்தது.

“இவற்றில் பெரும்பாலும் 5,114 புகார்கள் மதிப்புமிக்க பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது தொடர்பாக பெறப்பட்டன, அதைத் தொடர்ந்து வீடுகள் (4,215), வாகனங்கள் (619) மற்றும் கால்நடைகள் (542) போன்றவைகள் தொடர்பிலும் இந்த வெள்ளச் சேதங்கள் பதிவாகின.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகோரல்களை சரிபார்ப்பதில் இந்த புகார்கள் பயனுள்ளதாக இருக்கும், அதே நேரத்தில் அதிகாரிகள் உதவி வழங்குவதற்கும் இந்த தரவுகளைப் பயன்படுத்தலாம், ”என்று அவர் இன்று வகாஃப் பாரு காவல் நிலையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here