டுங்கூன்:
நாடு முழுவதும் சமூக மேம்பாட்டுத் துறையின் (கெமாஸ்) கீழ் புதிய நர்சரி கட்டிடங்களை பாதுகாப்பான பகுதிகளில் கட்ட திட்டமிட்டுள்ளதாக, கிராமப்புற மற்றும் உள்ளக வளர்ச்சி அமைச்சகம் (KKDW) தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கற்றல் மற்றும் பராமரிப்பு மையங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கிராமப்புற மற்றும் உள்ளக வளர்ச்சி துறையின் துணை அமைச்சர், டத்தோ ரூபியா வாங் கூறினார்.