பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாநில அரசுக்குத் தெரிவிக்காமல் தெரெங்கானுவுக்கு வந்ததற்காக மந்திரி பெசார் ஷம்சூரியிடம் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்த செய்தியை பிரதமர் துறை மறுத்துள்ளது.
ஒரு முகநூல் பதிவில், அன்வாரின் புகைப்படத்துடன் வைரலான ட்வீட் ‘Malaysia Kiri’ என்ற கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது என்று ஜேபிஎம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதள கணக்கில் வரும் தகவல்கள் தவறானவை. சரிபார்க்கப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (செய்தி நம்பகத்தன்மை) உங்களுக்குத் தெரியாவிட்டால் பகிர வேண்டாம் என்று அது கூறியது.