ஜோகூரில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து, நண்பகல் 2 மணி அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422 பேராக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு 1,093 பேராக அதிகரித்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
அங்கு புதிதாக ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, அதனைத் தொடர்ந்து குளுவாங், சிகாமாட் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 13 நிவாரண மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.